Tuesday, January 31, 2012

வல்லாதிக்க சமூகம்

புகழாளிகள், பிரபலங்கள், அதிகாரவர்க்கங்கள், சுயநல இன, மத, அரசியல் தலைவர்கள்..... இப்படி இவர்கள் பெரும்பாலும் தங்கள் இருப்பை சரிசெய்வதிலும் / உயர்த்துவதிலும் காட்டுகிற முனைப்பை ஏன் மக்களின் இழப்பில் - இறப்பில் காட்ட மற(று)க்கிறார்கள்?..... நல்லவராக தெரிபவெரெல்லாம் இதயமற்ற வல்லவர்களோடு ஐக்கியமாகி சனநாயக நாட்டில் ஒரு மாபெரும் சர்வாதிகார சமுதாயத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்களே...... இதை எப்படி நாம் கட்டுடைக்கப் போகிறோம்? இந்த சனநாயகத்தின் மன்னர்கள்(!) - மக்கள் எப்போது திரண்டெழப்போகிறார்கள்??

No comments:

Post a Comment