Tuesday, January 31, 2012

முடக்கப்படும் முல்லைப்பெரியாறும் அடக்கப்படும் அணு உலையும்

தமிழன்னையின் தென்மண் காக்க முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டியது.... களம் கண்டு வென்றெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அணைக்காப்புக்குரலை இங்கே பதிவு செய்வோம்!.......... அணை உடைந்தால் இந்தியா உடையும்!.... இது பிரிவினையல்ல, எதிர்வினைக்கு எதிர்வினை!!


குடிக்கும் புனலுக்காக போராடுகிறோம். தமிழர் உழைப்பைத் தின்று உடல் வளர்த்துவரும் சேட்டன்களுக்கு இப்போது குறுதி குடிக்கும் வெறியோ.... மமதை வேண்டாம் மலையாளிகளே..... அறவழியில் எங்கள் வழிகளை அடைத்தால்போதும்..... உங்கள் இரத்தம் சுருங்கிவிடும்...... அறிவால் தீர்வு காண விரும்புகிறோம். தேவையில்லாமல் அறிவாளுக்கு அழைப்பு விடுக்காதீர்கள்!


அணு உலையால் உயிருக்கு உலை வைப்பது போதாதென்று காவிரி, கிருஷ்ணா, பாலாறு, முல்லைப் பெரியாறு என திரும்பும் திசையெல்லாம் நீர் ஆறுகளால் நம் வாழ்வுரிமைக்கும் நாச வலைவீசும் அரசியல் மோசடியை – அநீதியை அசராது துணிந்து எதிர்ப்போம்! மத்திய – அண்டை மாநில (காங்கிரஸ்) அரசுகளின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்!

கயமைக்கும் பொய்மைக்கும்
தோள் கொடுக்கிறது கேரளம்!
உரிமை – உண்மை இருந்தும்
உறங்கலாமா தமிழகம்???
இறையாண்மை போர்வையில் காலம் முழுதும் இரந்து நிற்க
தமிழரென்ன ஆண்மையற்று கிடக்கிற தன்மானமில்லா பிறவியா?? தமிழ் மண் – இனம் காக்கும் உரிமைகளைக் காக்க / மீட்டெடுக்க தமிழராய் ஒன்றுகூடி தயங்காமல் தோள் கொடுக்க வேண்டிய தருணமிது தோழர்களே!

வருங்காலத்தில் இரவாமை நிலை வேண்டின் வாருங்கள்….
நம்வளம் காக்கும் உரிமைக்கு குரல் கொடுப்போம்!
முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம்!
தமிழக எல்லைகளை மீட்டெடுப்போம்!!

No comments:

Post a Comment