Saturday, December 17, 2011

இந்திய இறையாண்மையின் பேரில் தமிழர் இழந்த மண்





ஆந்திரத்தில் தமிழர் இழந்த மண்

·         சித்தூர் வட்டம்
·         திருப்பதி (சந்திரகிரி) வட்டம்
·         திருக்காளத்தி வட்டம்
·         பாமனேறு வட்டம்
·         குப்பம் ஜமீன் பகுதி

கர்நாடகத்தில் தமிழர் இழந்த மண்

·         கோலார் தங்க வயல்
·         பெங்களூரு தண்டுப்பகுதி
·         கொல்லங்கோடு வனப்பகுதி
·         பாலக்காடு வட்டம்
·         கொள்ளே காலம் வட்டம்

கேரளத்தில் தமிழர் இழந்த மண்

·         தேவிகுளம் வட்டம்
·         பீர்மேடு வட்டம்
·         செங்கோட்டை வனப்பகுதி
·         நெய்யாற்றங்கரை வட்டம்
·         நெடுமாங்காடு கிழக்குப் பகுதி

இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்ட தமிழர் நிலம்

·         கச்சத்தீவு 
.-
..

தமிழா.... தமிழா.....
இந்தியத்தா(யா)ல் நாம் இழந்தது பார்த்தாயா….
இன்னுமா மௌனம்… இதயத்தில் தயக்கம்…


நமக்கு வேண்டியது
இறையாண்மையா?
இரவாமையா??

தன்மானம் இல்லையேல்
யாசித்து விழு!...

இனமானம் பெரிதென்றால்
யோசித்து எழு!!

தமிழ்-தமிழர்-தமிழ்நாடு பாதுகாப்பு இயக்கம்



எழு தமிழா……….. எழு!




எழு தமிழா……….. எழு!


படுகொலை ஆயினர் தமிழர் ஈழத்தில்
பாதகம் செய்து பழி தீர்த்தது இந்தியா

இலங்கையின் இம்சையில் தமிழக மீனவர்
உணர்வற்று கிடக்குது இந்திய இறையாண்மை...

இந்தி(ய)க்கொள்கையால் கொள்ளைப்போனது
தமிழ்வழி நிலங்கள் நான்கு திசையிலும்...

தமிழர் தலைமேல் அணு உலை அமர்த்தி
எம்மைப் பகைப்பவருக்கும் மின்பகிர்வு...

சோற்றுலை வைக்க ஆற்றுநீர்
தரமறுக்கிறான் அண்டை இந்தியன் - இவ்வளவு

இழந்தும் இறைஞ்சுகிறோம்...மைய அரசோ பாராமுகம்
இந்திய தேசியக் கட்சிகளோ இரட்டைவேடம்.....

இனமும் மொழியும் வேறாய் இருந்தும்
வேற்றுமையில் ஒற்றுமை காக்கிறோம்

தம்பிள்ளையர் காக்க இதயம் இல்லையேல்
இந்தியத் தாய்க்கு இறையாண்மை எதற்கு?

தமிழனைக் காக்க தமிழாண்மை தீர்வாயின்
இந்திய வேரைத்தாங்கும் கிளையாய் எதற்கு?

மாற்றாந்தாயாய் பாரத அன்னை
அணை உடைவதை வேடிக்கைப் பார்த்தால்-போலி

இறையாண்மை தகர்த்து இந்தியா உடைவதை
தமிழ்த்தாய் பார்ப்பது நிச்சயம்! நிச்சயம்!!

தமிழா.... தமிழா.....
இந்தியத்தா(யா)ல் நாம் இழந்தது பார்த்தாயா….
இன்னுமா மௌனம்… இதயத்தில் தயக்கம்…


நமக்கு வேண்டியது
இறையாண்மையா?
இரவாமையா??

தன்மானம் இல்லையேல்
யாசித்து விழு!...

இனமானம் பெரிதென்றால்
யோசித்து எழு!!

தமிழ்-தமிழர்-தமிழ்நாடு பாதுகாப்பு இயக்கம்

Wednesday, December 7, 2011

தமிழா.....வேண்டியது இறையாண்மையா? இரவாமையா?!


அணு உலையால் உயிருக்கு உலை வைப்பது போதாதென்று காவிரி, கிருஷ்ணா, பாலாறு, முல்லைப் பெரியாறு என திரும்பும் திசையெல்லாம் ஆறுகளால் நம் வாழ்வுரிமைக்கும் நாச வலைவீசும் அரசியல் மோசடியை – அநீதியை அசராது துணிந்து எதிர்ப்போம்! மத்திய – அண்டை மாநில (காங்கிரஸ்) அரசுகளின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்!
  
கயமைக்கும் பொய்மைக்கும்
தோள் கொடுக்கிறது கேரளம்!
உரிமை – உண்மை இருந்தும்
உறங்கலாமா தமிழகம்???

இறையாண்மை போர்வையில் காலம் முழுதும் இரந்து நிற்க தமிழரென்ன ஆண்மையற்று கிடக்கிற தன்மானமில்லா பிறவியா?? தமிழ் மண்இன உரிமைகளைக் காக்க / மீட்டெடுக்க தமிழராய் ஒன்றுகூடி தயங்காமல் தோள் கொடுக்க வேண்டிய தருணமிது தோழர்களே!

வருங்காலத்தில் இரவாமை நிலை வேண்டின் வாருங்கள்
நம்வளம் காக்கும் உரிமைக்குக் குரல் கொடுப்போம்!
முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம்!
தமிழக எல்லைகளை மீட்டெடுப்போம்!!
இவண்
தமிழ்–தமிழர்–தமிழ்நாடு உரிமைக்காப்பு


கூட்டமைப்பு