Tuesday, January 31, 2012

தமிழரை மயக்கும் ஆரிய / திராவிட மாயை

இந்திக்காரன் இந்திக்காரனாக வாழ்கிறான். கன்னடன் கன்னடனாக, தெலுங்கன் தெலுங்கனாக, மலையாளி மலையாளியாக வாழ்கிறான். நாம் மட்டும் திராவிடனாக வாழவேண்டுமா?..என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

ஆரிய மாயை நம்மை அலைக்கழித்தது. திராவிட மாயை நம்மைத் திசை திருப்பியது. நாம் தமிழர், நமது மொழி தமிழ், நமது நாடு தமிழ்நாடு என்கிற உணர்வு பெருகவேண்டும். பிற மாயைகளிலிருந்து நாம் விலக வேண்டும்.

இது தமிழர் நாடா, வந்தேறிகளின் வேட்டைக்காடா என்பதைத் தமிழன் ஒவ்வொருவரும் உணரவேண்டும். தமிழே உலகத்தின் முதன்மொழி; மாந்தனின் பிறந்தகம் குமரிக்கண்டம்; தமிழ், திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும் என்று அறைந்தார் “மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர்.

No comments:

Post a Comment