இன மானன்
தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
Monday, November 28, 2011
உயிருக்கு உலை வைக்கும் அணு உலை தேவையா?
சாதரண மக்களின் உயிர்களையும் உண(ர்)வுகளையும் ஒடுக்க / அழிக்கத் துடிக்கின்ற, பிரதிபலனுக்காய் இயங்குகின்ற
பிரதிநிதித்துவ சனநாயகம், பார் உயிர்கள் அனைத்தும் என்றென்றும் வளமாய் வாழ வழித்தேடி, போராட்டக் களத்தில் இருக்கும் மக்கள் சனநாயகத்தின் முன் மண்டியிடும் நாள் வெகுதொலைவில் இல்லை!
மத்திய அரசே! மாற்றான் கைக்கூலியே!
அணுவிற்கு எதிரான எங்கள் போராட்டம்
அணுகுண்டு போட்டு ஒடுக்க நேர்ந்தாலும்
அனுதினமும் களமாடி உங்கள் கடைசிசிசி....
அணுகுண்டை உண்டாவது எம்மவர்க்கும்
அடுத்த தலைமுறைக்கும் ஆவன செய்யாது அயரமாட்டோம்!
அணு உலையை மாய்க்கும்வரை ஓயமாட்டோம்!
அஞ்சினால் வரலாறு படைக்க முடியாதாம்... ஆம்
அகிலத்திற்கே ஆபத்தை விளைவிக்கும்
அணு உலைகளை அழித்தொழிக்க
அதிகார மையங்களுக்கு பயந்து ஒதுங்கினால்
அருந்தமிழர்க்கு மட்டுமல்ல அகில உயிர்களுக்கும்
அச்சமில்லா வாழ்வை உறுதிசெய்யும் வரலாறு நிகழ்ந்திடுமா?
அணு உலையை மூடாமல்
கூடங்குளத்திலிருந்து கூட்டத்தை
களையமாட்டோம் என அறைகூவலிடும்
அஞ்சா நெஞ்சர்களுக்கு
உயிர்க்கருணை உள்ளங்களுக்கு
தன்மானப் போராளிகளுக்கு
தலைவணங்குகிறோம்!
சகப்போராளியாக
மனித நேயன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment