Wednesday, December 7, 2011

தமிழா.....வேண்டியது இறையாண்மையா? இரவாமையா?!


அணு உலையால் உயிருக்கு உலை வைப்பது போதாதென்று காவிரி, கிருஷ்ணா, பாலாறு, முல்லைப் பெரியாறு என திரும்பும் திசையெல்லாம் ஆறுகளால் நம் வாழ்வுரிமைக்கும் நாச வலைவீசும் அரசியல் மோசடியை – அநீதியை அசராது துணிந்து எதிர்ப்போம்! மத்திய – அண்டை மாநில (காங்கிரஸ்) அரசுகளின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்!
  
கயமைக்கும் பொய்மைக்கும்
தோள் கொடுக்கிறது கேரளம்!
உரிமை – உண்மை இருந்தும்
உறங்கலாமா தமிழகம்???

இறையாண்மை போர்வையில் காலம் முழுதும் இரந்து நிற்க தமிழரென்ன ஆண்மையற்று கிடக்கிற தன்மானமில்லா பிறவியா?? தமிழ் மண்இன உரிமைகளைக் காக்க / மீட்டெடுக்க தமிழராய் ஒன்றுகூடி தயங்காமல் தோள் கொடுக்க வேண்டிய தருணமிது தோழர்களே!

வருங்காலத்தில் இரவாமை நிலை வேண்டின் வாருங்கள்
நம்வளம் காக்கும் உரிமைக்குக் குரல் கொடுப்போம்!
முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம்!
தமிழக எல்லைகளை மீட்டெடுப்போம்!!
இவண்
தமிழ்–தமிழர்–தமிழ்நாடு உரிமைக்காப்பு


கூட்டமைப்பு



No comments:

Post a Comment