எழு தமிழா……….. எழு!
படுகொலை ஆயினர் தமிழர் ஈழத்தில்
பாதகம் செய்து பழி தீர்த்தது இந்தியா
இலங்கையின் இம்சையில் தமிழக மீனவர்
உணர்வற்று கிடக்குது இந்திய இறையாண்மை...
இந்தி(ய)க்கொள்கையால் கொள்ளைப்போனது
தமிழ்வழி நிலங்கள் நான்கு திசையிலும்...
தமிழர் தலைமேல் அணு உலை அமர்த்தி
எம்மைப் பகைப்பவருக்கும் மின்பகிர்வு...
சோற்றுலை வைக்க ஆற்றுநீர்
தரமறுக்கிறான் அண்டை இந்தியன் - இவ்வளவு
இழந்தும் இறைஞ்சுகிறோம்...மைய அரசோ பாராமுகம்
இந்திய தேசியக் கட்சிகளோ இரட்டைவேடம்.....
இனமும் மொழியும் வேறாய் இருந்தும்
வேற்றுமையில் ஒற்றுமை காக்கிறோம்
தம்பிள்ளையர் காக்க இதயம் இல்லையேல்
இந்தியத் தாய்க்கு இறையாண்மை எதற்கு?
தமிழனைக் காக்க தமிழாண்மை தீர்வாயின்
இந்திய வேரைத்தாங்கும் கிளையாய் எதற்கு?
மாற்றாந்தாயாய் பாரத அன்னை
அணை உடைவதை வேடிக்கைப் பார்த்தால்-போலி
இறையாண்மை தகர்த்து இந்தியா உடைவதை
தமிழ்த்தாய் பார்ப்பது நிச்சயம்! நிச்சயம்!!
இந்தியத்தா(யா)ல் நாம் இழந்தது பார்த்தாயா….
இன்னுமா மௌனம்… இதயத்தில் தயக்கம்…
நமக்கு வேண்டியது
இறையாண்மையா?
இரவாமையா??
தன்மானம் இல்லையேல்
யாசித்து விழு!...
இனமானம் பெரிதென்றால்
யோசித்து எழு!!
தமிழ்-தமிழர்-தமிழ்நாடு பாதுகாப்பு இயக்கம்
No comments:
Post a Comment